sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஏப் 11, 2025 01:46 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:விபத்தில் சிக்கிய வாகனங்கள், மதுராந்தகம் புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மதுராந்தகம் நகர பகுதியில் இருந்து சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், புறவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்நிலையில், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கும் வாகனங்கள் மற்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, இந்த புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளனர்.

அதனால், விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, காவல் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us