/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்கு இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதி
/
மின்விளக்கு இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 25, 2024 01:51 AM

திருப்போரூர்:திருப்போரூர்- காட்டூர் சாலையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும், இச்சாலை வழியாக அம்மாபேட்டை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, இப்பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படும்போது, அவை தெரியாமல் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் நிலை ஏற்படுகிறது.
மேலும், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.