/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண் மூடிய மழைநீர் கால்வாய் சிங்கபெருமாள்கோவிலில் அவதி
/
மண் மூடிய மழைநீர் கால்வாய் சிங்கபெருமாள்கோவிலில் அவதி
மண் மூடிய மழைநீர் கால்வாய் சிங்கபெருமாள்கோவிலில் அவதி
மண் மூடிய மழைநீர் கால்வாய் சிங்கபெருமாள்கோவிலில் அவதி
ADDED : ஜூலை 05, 2025 01:01 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், மழைநீர் கால்வாயில் மண் மூடியுள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவிலுக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர், பிள்ளையார் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மழைக்காலங்களில் இங்குள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல, தெருக்களின் ஓரங்களில் சிமென்ட் கால்வாய் மற்றும் தரை பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தற்போது இந்த கால்வாய்களில் கழிவுநீர் நிரம்பி உள்ளதுடன், தரைப்பாலம் முழுதும் மண்ணால் துார்ந்து உள்ளது. இதனால், மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக, இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சிமென்ட் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி உள்ளதால், மழைக்காலங்களில் தெருக்களில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.
இதன் காரணமாக, கடுமையாக பாதிக்கப்படுகிறோம். கொசுத்தொல்லை அதிகரித்து, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மற்றும் மழைநீர் கால்வாய்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.