sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நந்தனம் வேளாண்மை அலுவலகம் செங்கைக்கு... மாற்றம் நீண்டகால கோரிக்கை ஏற்பால் விவசாயிகள் நிம்மதி

/

நந்தனம் வேளாண்மை அலுவலகம் செங்கைக்கு... மாற்றம் நீண்டகால கோரிக்கை ஏற்பால் விவசாயிகள் நிம்மதி

நந்தனம் வேளாண்மை அலுவலகம் செங்கைக்கு... மாற்றம் நீண்டகால கோரிக்கை ஏற்பால் விவசாயிகள் நிம்மதி

நந்தனம் வேளாண்மை அலுவலகம் செங்கைக்கு... மாற்றம் நீண்டகால கோரிக்கை ஏற்பால் விவசாயிகள் நிம்மதி


ADDED : மே 31, 2025 11:10 PM

Google News

ADDED : மே 31, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு சென்னை நந்தனத்தில் இயங்கி வந்த வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், செங்கல்பட்டுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின்நீண்டகால கனவு நிறைவேறியதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய வேளாண்மை பொறியியல் உப கோட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு வேளாண்மை பொறியியல் உப கோட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன.

இவற்றுக்கான அலுவலகம், சென்னை நந்தனத்தில் இயங்கி வருகிறது.

மதுராந்தகம் வேளாண்மை பொறியியல் உபகோட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இதன் அலுவலகம், மதுராந்தகம் பகுதியில் இயங்கி வருகிறது.

இங்கு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான டிராக்டர், மண் தள்ளும் வாகனம், கை தெளிப்பான், விசை தெளிப்பான், நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் ஆகியவற்றிற்கு அதிக மானியம் பெறும் வகையில் மனு கொடுத்து, விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

செங்கல்பட்டில் இயங்க வேண்டிய வேளாண்மை பொறியியல் உப கோட்ட அலுவலகம், சென்னை நந்தனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு தேவையான டிராக்டர், மண்தள்ளும் வாகனம், கை தெளிப்பான், நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் ஆகியவற்றிற்கு, அதிக மானியம் பெறும் வகையில் மனு கொடுப்பதற்கு, நந்தனத்தில் உள்ள உப கோட்ட அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

விவசாயிகள் இல்லாத இடத்தில், உப கோட்ட அலுவலகம் செயல்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு எந்த வித பயனும் இல்லை. கிராமப்புறங்களில் உள்ள, விவசாயிகள் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் சென்னைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு தேவையற்ற பண விரயமும், கால விரயமும் ஏற்படுகிறது. நந்தனத்தில் இயங்கும் வேளாண்மை பொறியியல் உப கோட்ட அலுவலகத்தை, திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, தொடர்ந்து அரசு மற்றும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பின், நந்தனத்தில் இயங்கும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை, செங்கல்பட்டு வருவாய் கோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என, வேளாண்மை தலைமை பொறியாளருக்கு, கலெக்டர் அருண்ராஜ், கருத்துரு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை நந்தனம் வேளாண்மை உழவர் நலன் - வேளாண்மைப் பொறியியல்துறை, உதவி செயற்பொறியாளர் - வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை செங்கல்பட்டு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட இடத்திற்கு மாற்றம் செய்து கடந்த 20ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர்.

செங்கல்பட்டு கலெக்டர் அலுலக வளாகத்தில், நான்காம் தளத்தில், செங்கல்பட்டு செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது.

இதே அலுவலக பகுதியில், உதவிப் பொறியாளர் - வேளாண்மை பொறியியல் அலுவலகம் விரைவில் செயல்படும். இந்த அலுவலகத்தில், விவசாயிகள் தேவை குறித்து, மனுக்கள் அளிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us