sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்

/

வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்

வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்

வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்


ADDED : செப் 21, 2025 01:25 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மனுக்கு, நாளை நவராத்திரி உத்சவம் துவங்குகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.

வேதகிரீஸ்வரரின் அம்பாளான திரிபுரசுந்தரி அம்மனுக்கு, நாளை முதல், வரும் 30ம் தேதி வரை, நவராத்திரி உத்சவம் நடத்தப்படுகிறது.

இதை முன்னிட்டு, தினமும் மாலை 5:00 மணிக்கு, உற்சவ அம்பாள் சிறப்பு அபிஷேகம் கண்டு, தினம் ஒரு திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அஷ்டகந்த மூலிகையாலான அம்பாளிற்கு, தினசரி பாத அபிஷேகம் மட்டுமே செய்து, ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே, முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.

நவராத்திரி உத்சவ இறுதி நாளான 30ம் தேதி, முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us