sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நெடுமரம் கிராமத்தினர் கோரிக்கை

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நெடுமரம் கிராமத்தினர் கோரிக்கை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நெடுமரம் கிராமத்தினர் கோரிக்கை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நெடுமரம் கிராமத்தினர் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர், நெடுமரம் ஊராட்சியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுஞ்சூர் அடுத்த நெடுமரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இப்பகுதியில் நிலத்தடி நீரில் சுண்ணாம்புத் தன்மை அதிக அளவில் இருப்பதால், 50க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 25க்கும் மேற்பட்டோர், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெடுமரம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிகாரிகளிடம் பலமுறை கிராமத்தினர் மனு அளித்துள்ளனர். ஆனால், தற்போது வரை நடவடிக்கை இல்லை.

அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் நெடுமரம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us