/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதுகாப்பற்ற இடத்தில் டூவீலர் பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்
/
பாதுகாப்பற்ற இடத்தில் டூவீலர் பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்
பாதுகாப்பற்ற இடத்தில் டூவீலர் பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்
பாதுகாப்பற்ற இடத்தில் டூவீலர் பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்
ADDED : ஏப் 28, 2025 01:15 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் மறைமலைநகர் ரயில் நிலையம் வந்து, அருகில் உள்ள காலி இடங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து, வாகன திருட்டுகள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தடுக்க மறைமலைநகர் காவல்துறை சார்பில், இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்த வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் இதை கண்டுகொள்ளாததால், திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் கூறியதாவது:
மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை ஓரம், சாமியார் கேட் அருகில் வனப்பகுதியை ஒட்டி, பாதுகாப்பு இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்த வாகனங்களை குறிவைத்து, மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். ரயில் நிலைய 'பார்க்கிங்' பகுதியில் கட்டணம் செலுத்தி நிறுத்த தயங்கி வருகின்றனர்.
இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களைக் காணவில்லை என, ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கின்றனர்.
பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்த பின்னரும், பலரும் தங்களின் வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.