/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுாரில் ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
/
மதுாரில் ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
மதுாரில் ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
மதுாரில் ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
ADDED : பிப் 01, 2025 12:31 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுார் ஊராட்சி உள்ளது.
இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய அங்கன்வாடி கட்டடம், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. பின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், 2023 - 24ல், புதிய அங்கன்வாடி மையம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த மையத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிதாக அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் தங்கம்மாள், அங்கன்வாடி பணியாளர் சந்திரா, ஊராட்சி செயலர், ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.