/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்காரத்தோட்டம் பகுதியில் தயாராகும் புதிய குடிநீர் தொட்டி
/
சிங்காரத்தோட்டம் பகுதியில் தயாராகும் புதிய குடிநீர் தொட்டி
சிங்காரத்தோட்டம் பகுதியில் தயாராகும் புதிய குடிநீர் தொட்டி
சிங்காரத்தோட்டம் பகுதியில் தயாராகும் புதிய குடிநீர் தொட்டி
ADDED : அக் 15, 2025 10:11 PM
வண்டலுார்: வண்டலுார், சிங்காரத்தோட்டம் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக, அப்பகுதியில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகளில் 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாக நீர் உறிஞ்சப்பட்டு, 20 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு, குழாய் வழியாக குடிநீர் வினியோகம் நடக்கிறது.
இதில், 4வது வார்டுக்கு உட்பட்ட சிங்காரத்தோட்டம் பகுதியில், தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகம் முறையாக இல்லை.
இதனால், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடைகளில் விற்கப்படும் குடிநீர் கேன்களை வாங்கி, சமையல் உட்பட இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வாக, 30,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி, துவக்கப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்த மாதம் கட்டுமான பணிகள் முடிந்த பின், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக சிங்காரத்தோட்டம் பகுதி முழுதும், முறையான குடிநீர் வினியோகம் தடையின்றி நடைபெறும்.