sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொந்த ஊர் புறப்படுவோர் சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

/

சொந்த ஊர் புறப்படுவோர் சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சொந்த ஊர் புறப்படுவோர் சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சொந்த ஊர் புறப்படுவோர் சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்


ADDED : அக் 15, 2025 10:11 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்லவும், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நாளை பிற்பகல் 2:00 மணி முதல் நாளை மறுநாள் வரை:

சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரும் கன ரக வாகனங்கள், பூந்தமல்லியில் திரும்பி ஸ்ரீபெரும்புதுார் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக ஜி.எஸ்.டி., சாலையில் சென்று, தாங்கள் செல்ல வேண்டிய இடங் களுக்கு செல்லலாம்

மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கன ரக வாகனங்கள், மதுரவா யலில் திரும்பி ஸ்ரீபெரும்புதுார் - காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து செல்லலாம்

காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கன ரக வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதுார் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து செல்லலாம்

அக்., 21 பிற்பகல் 2:00 மணி முதல் அக்., 22 வரை:

செங்கல்பட்டு வழியாக வரும் வாகனங்கள், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் சென்று வாலாஜாபாத் - காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதுார் வழியாக பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்

சிங்கபெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம் - ஸ்ரீபெரும்புதுார் வழியாக திரும்பி பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்

இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கன ரக வாகனங்கள், வண்டலுார் வெளிவட்ட சாலை மற்றும் மதுரவாயல் புறவழி சாலை வழியாக திருப்பி விடப்படும்

அக்., 21, 22ல் விடுமுறை முடிந்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுபடுத்த, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்

புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு செல்வோர், நெரிசலற்ற பயணத்திற்காக, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., வழித்தடங்களில் செல்வதற்கும், திரும்புவதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

சாலை நெரிசலை தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணியர் அவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .






      Dinamalar
      Follow us