sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுளி ஊராட்சி மக்கள் அவதி

/

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுளி ஊராட்சி மக்கள் அவதி

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுளி ஊராட்சி மக்கள் அவதி

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுளி ஊராட்சி மக்கள் அவதி


ADDED : ஜூன் 01, 2025 09:00 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த குமுளி ஊராட்சியில், மொபைல் போன் 'சிக்னல்' இல்லாததால் பகுதிவாசிகள், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஊராட்சி நிர்வாகமும் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமுளி ஊராட்சியில், ஒன்பது வார்டுகள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.

வேளாண் தொழில் பிரதானமாக உள்ள குமுளி ஊராட்சியில், மொபைல் போன் சிக்னல்கள் முறையாக இல்லை. இதனால், கல்லுாரி மாணவர்கள் இணைய சேவையைப் பயன்படுத்த முடியவில்லை.

தவிர, வரி வசூல் உள்ளிட்ட அலுவலக பணியை துரிதமாக செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தத்தளிக்கிறது.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:

ஊராட்சியில் 90 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்தி வந்தாலும், வீட்டின் மாடியிலோ அல்லது ஊரை விட்டு வெளியேறி, பிரதான சாலைக்குச் சென்றால் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தொடர்பு கொள்ள, பெரும் இடையூறு ஏற்படுகிறது.

எனவே, குமுளி ஊராட்சியில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க, சம்பந்தப்பட்ட மொபைல் அலைவரிசை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us