sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு

/

மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு

மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு

மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு


ADDED : ஜன 13, 2024 10:19 PM

Google News

ADDED : ஜன 13, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது.

ஏரி, ஆறு, குளம், கிணறு போன்ற நீராதாரங்கள் மூலமாக நெல், கரும்பு, எள், உளுந்து உள்ளிட்டவை பருவத்திற்கு ஏற்றாற்போல பயிரிடப்படுகிறது.

தற்போது, செய்யூர் வட்டத்தில், 20,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரும், 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலாவும் பயிரிடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் புதிதாக பயிரிடப்பட்ட தர்ப்பூசணி, மணிலா மற்றும் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், நேற்று செங்கல்பட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஷ்வரி, பவுஞ்சூர் வட்டார உதவி வேளாண் இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாக்கம், வீரபோகம், மடையம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரம் சேகரிக்கவும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடுபொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us