ADDED : ஜன 13, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர
திருப்போரூர் சுற்று வட்டார பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், தண்டலம் கிராமத்திலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் வெங்கடேசன், 56, என்பவரது மளிகை கடையில், குட்கா விற்பது தெரிந்தது.
கடையில் இருந்த நான்கு குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.