/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இண்டிகோ விமானங்களில் ஒரு கோடி பேர் பயணம்
/
இண்டிகோ விமானங்களில் ஒரு கோடி பேர் பயணம்
ADDED : டிச 05, 2024 11:09 PM
சென்னை, இந்தியாவில் முன்னணி விமான நிறுவனமாக, 'இண்டிகோ' செயல்படுகிறது. ஏ.ஆடி.ஆர்., - 72, ஏர்பஸ் 320 வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன.
டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோல்கட்டா என, நாட்டில் உள்ள பல நகரங்களுக்கு, விமான சேவை வழங்கி வருகிறது.
தவிர, மஸ்கட், குவைத் என வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்குகிறது. இந்நிலையில், நவ., மாதத்தில் 1 கோடி பயணியர் இண்டிகோ விமானங்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், 'ஏர்ஹெல்ப்' எனும் நிறுவனம் நடத்திய சர்வேயில், மோசமான சேவை வழங்கிய விமான நிறுவனங்கள் பட்டியலில் 109 விமான நிறுவனங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதில், மிக மோசமான சேவை வழங்கியதாக, இண்டிகோ நிறுவனம் 103வது இடத்தில் உள்ளது. இவை நம்பகத்தன்மையானது கிடையாது என, இண்டிகோ நிறுவனம் மறுத்துள்ளது.