sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்


ADDED : ஏப் 27, 2025 03:33 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில், மூவர் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 39; தனியார் துறை ஊழியர்.

இவர், நேற்று முன்தினம் இரவு 9:15 மணியளவில், தன் 'ஹீரோ பேஷன்' இரு சக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரியிலிருந்து காயரம்பேடு நோக்கிச் சென்றார்.

அதே நேரம், ஊனமாஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தாமோதரன், 48, என்பவர், 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' வாகனத்தை ஓட்டியபடி, கூடுவாஞ்சேரி நோக்கி வந்தார்.

இவரது வாகனத்தில் பின்னால், தங்கதுரை, 65, என்ற முதியவர் அமர்ந்திருந்தார்.

அப்போது, நெல்லிக்குப்பம் சாலை, மூலக்கழனி, தனம் சூப்பர் மார்க்கெட் அருகே வரும் போது, இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

இதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில், 'ஹீரோ பேஷன்' வாகனத்தை ஓட்டி வந்த கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.

'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' வாகனத்தை ஓட்டிவந்த தாமோதரனும், பின்னால் அமர்ந்து வந்த தங்கதுரையும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us