sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு ஓய்வறை திறப்பு

/

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு ஓய்வறை திறப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு ஓய்வறை திறப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டுனர்களுக்கு ஓய்வறை திறப்பு


ADDED : ஏப் 08, 2025 06:18 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 06:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறையை, கலெக்டர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை, கூட்டுறவுத் துறை, முதன்மை கல்வி அலுவலகம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள், தங்கி ஓய்வெடுக்க அறை இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

இதையடுதது, வாகன ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க அறை ஒதுக்கித் தருமாறு, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தரை தளத்தில், வாகன ஓட்டுனர்களுக்கு ஓய்வறை ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஓட்டுனர்களுக்கான ஓய்வறையை, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று திறந்து வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா மற்றும் கலெக்டர் அலுவலக வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us