sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாது மணல் எடுக்க எதிர்ப்பு

/

தாது மணல் எடுக்க எதிர்ப்பு

தாது மணல் எடுக்க எதிர்ப்பு

தாது மணல் எடுக்க எதிர்ப்பு


ADDED : நவ 09, 2025 09:44 PM

Google News

ADDED : நவ 09, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: நயினார்குப்பம் கிராமத்தில் நீர்நிலைப்பகுதியில் தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கழிவெளி ஓரத்தில் சிலிக்கான் தாது மணல் படுகை உள்ளது.

இந்த சிலிக்கான் மணல் கண்ணாடி தயாரிப்பு, கட்டுமானப்பொருட்கள் தயாரிப்பு, தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கனிம வள நிறுவனம் சார்பாக டெண்டர் விடப்பட்டு இப்பகுதியில் உள்ள சிலிக்கான் தாது மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிக அளவில் தாது மணல் ஏற்றுமதி செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், கழிவெளிநீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்புநீராக மாறி வருவதால் குடிநீருக்கு மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது நயினார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்கான பணி நடந்து வருகிறது.

நயினார்குப்பம் பகுதியில் தாது மணல் எடுத்தால் நிலத்தடிநீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us