sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

/

கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு


ADDED : ஜன 02, 2024 04:52 AM

Google News

ADDED : ஜன 02, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் ; திருப்போரூர் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் குடியிருப்போருக்கு சொந்தமான நிலங்கள், கந்தசுவாமி கோவில் பெயரில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.

இது குறித்து, விவசாயிகள் சங்கங்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் மனு விபரம்:

திருப்போரூர் கிராமத்தில், 135 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயிகள் தங்கள் பெயரில் தாக்கலாகியுள்ள பட்டாவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்து, இன்று வரை தங்கள் சுவாதீனத்திலும், அனுபோகத்திலும் விவசாயம் செய்து வருகின்றனர்.

நில உரிமையாளர்கள் பெயரில் இருக்க வேண்டிய பட்டா, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பெயரில் தவறுதலாக பதியப்பட்டுள்ளது.

இதனால், விவசாயம் சம்பந்தமாக மாநில அரசு மற்றும் மத்திய அரசின் உதவிகள் ஏதும் பெற முடியாமல், அனைவரும் பல ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பெயரில் உள்ள பட்டா எண்: 1-ஐ ரத்து செய்து, 'பூஜ்ஜிய' பட்டாவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்போரூர் நிலங்களை கள ஆய்வு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, பட்டாதாரரும் நில உரிமையாளருமான விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் என, அவரவர் பெயரில் பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கையாக, வரும் 10ம் தேதிக்குள் விவசாயிகள் உரிமை கோரப்படும் நிலம் சார்ந்த விபரங்களை, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கும்படி, தாசில்தார் பூங்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்போரூர் விவசாயிகள் பெயரில் இருக்க வேண்டிய பட்டா, தவறுதலாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பெயரில் பட்டா எண்: 1ல் நில உடைமை மேம்பாட்டு திட்ட 'அ' பதிவேட்டில் இருப்பதாகவும், அதை திருத்தம் செய்து, 'பூஜ்ஜிய' பட்டாவாக தாக்கல் செய்து, உரிய தனி நபர் பெயரில் பட்டா வழங்கிடவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்கள் தங்களால் உரிமை கோரப்படும் புலம் குறித்த விபரங்கள் மற்றும் ஆவணங்களை, வரும் 10ம் தேதிக்குள் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us