sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி


ADDED : ஏப் 03, 2025 02:05 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் பலவீனமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளதால், குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகில் அரசு பள்ளி உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக பள்ளி அருகே பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us