/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்னேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 19 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி
/
தென்னேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 19 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி
தென்னேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 19 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி
தென்னேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 19 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஜன 17, 2025 09:43 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சிக்குட்பட்ட தென்னேரிப்பட்டு கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இருந்தது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலமாக மேல்நிலைத் குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
மேல்நிலை தேக்கத்தொட்டியின் துாண்கள் சேதமடைந்து பலவீனமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2022ம் ஆண்டு மேல்நிலை தேக்கத்தொட்டி அகற்றப்பட்டு, குடிநீர் கிணற்றில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய்களை இணைத்து மின்மோட்டார் மூலமாக தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக மின் மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளதால் குழாய்களின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் புதிய மேல்நிலைத் தோக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது மாவட்ட கவுன்சிலர் நிதியில் 19 லட்சம் ரூபாயில் அதே இடத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.