/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சிறுகளத்துாரில் விபத்து அபாயம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சிறுகளத்துாரில் விபத்து அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சிறுகளத்துாரில் விபத்து அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சிறுகளத்துாரில் விபத்து அபாயம்
ADDED : ஏப் 26, 2025 01:27 AM

சித்தாமூர்:சிறுகளத்துார் கிராமத்தில், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால், விபத்து அபாயம் நிலவுகிறது.
சித்தாமூர் அடுத்த போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகளத்துார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குளக்கரை அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
குடிநீர் கிணற்றில் இருந்து இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளது.
மேலும் தொட்டியின் மேல்தளம் இடிந்து தண்ணீருக்குள் விழுந்து, இரும்புத் துகள்கள் கலந்த தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த காற்று வீசினால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக இந்த பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். மேலும், இங்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

