/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
வேடந்தாங்கலில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : மார் 31, 2025 01:58 AM
மதுராந்தகம்:வேடந்தாங்கலில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் வாயிலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
65,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு சார்பில் 27 நெல் கொள்முதல் நிலையங்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, 91 நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த வகையில் நேற்று, வேடந்தாங்கல் ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தால் வேடந்தாங்கல், வளையப்புத்துார், சித்தாத்துார், விநாயகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர்.