sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

/

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஜன 03, 2025 08:02 PM

Google News

ADDED : ஜன 03, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், செய்யூர் வி.சி., எம்.எல்.ஏ., பாபு தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் வருவாய் துறை, வேளாண்துறை, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில்,'பெஞ்சல்' புயல் காரணமாக கூவத்துார், கானத்துார், செய்யூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சேதமடைந்துள்ள மின்கம்பங்கள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின், சாலை சீரமைப்பு, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது குறித்து, மக்கள் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.






      Dinamalar
      Follow us