/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் அபாய பள்ளம் பெரும்பேர்கண்டிகையில் பீதி
/
சாலையோரம் அபாய பள்ளம் பெரும்பேர்கண்டிகையில் பீதி
ADDED : ஜன 13, 2025 12:47 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை சாலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், சாலையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடமலைப்புத்துாரில் இருந்து, பெரும்பேர் கண்டிகை செல்லும் சாலை உள்ளது.
இப்பகுதியில், அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
இது, பெரும்பேர் கண்டிகை பகுதிக்குச் செல்வோர், அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய சாலை.
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, சாலையில் வெள்ளம் பாய்ந்து ஓடியதால், சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்தால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோல் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மண் கொட்டி சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.