sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி

/

அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி

அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி

அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி


ADDED : பிப் 12, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, அனந்தமங்கலம் ஊராட்சி.

ஒரத்தி -- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ள அனந்தமங்கலம் குளக்கரை பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தேவைக்காக கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது. துருப்பிடித்துள்ள இரும்பு கம்பிகளும் வெளியே தெரிகின்றன.

இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உறுதித் தன்மை இழந்து உள்ளது தெரிகிறது.

மேல்நிலை குடிநீர் தொட்டியால் அசம்பாவிதம் ஏற்படும் முன், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மீண்டும் அதே பகுதியில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக் கோரி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us