/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி
/
அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் பீதி
ADDED : பிப் 12, 2025 01:19 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, அனந்தமங்கலம் ஊராட்சி.
ஒரத்தி -- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ள அனந்தமங்கலம் குளக்கரை பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தேவைக்காக கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது. துருப்பிடித்துள்ள இரும்பு கம்பிகளும் வெளியே தெரிகின்றன.
இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உறுதித் தன்மை இழந்து உள்ளது தெரிகிறது.
மேல்நிலை குடிநீர் தொட்டியால் அசம்பாவிதம் ஏற்படும் முன், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மீண்டும் அதே பகுதியில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக் கோரி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

