sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க பெற்றோர் வலியுறுத்தல்

/

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க பெற்றோர் வலியுறுத்தல்

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க பெற்றோர் வலியுறுத்தல்

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க பெற்றோர் வலியுறுத்தல்


ADDED : நவ 18, 2024 03:34 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வது வார்டில் மேட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.

அங்கன்வாடி மையக் கட்டடத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர்.

தற்போது, சில ஆண்டுகளாக, கட்டடத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து, பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு பழமையானதால், கடந்த இரண்டு ஆண்டாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது, தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக இடத்தில் போதிய அளவு இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அதிக அளவில் செல்வதில்லை.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையக் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us