/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகர பேருந்தில் பயணி உயிரிழப்பு
/
மாநகர பேருந்தில் பயணி உயிரிழப்பு
ADDED : அக் 07, 2025 11:36 PM
தாம்பரம்:தாம்பரத்தில், மாநகர பேருந்தில் பயணித்தவர், நெஞ்சு வலியால் மயங்கி உயிரிழந்தார்.
பாபநாசத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 38. தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரத்தில் தங்கி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை, தாம்பரத்தில் இருந்து தன் அறைக்குச் செல்ல, தடம் எண்: 583 என்ற மாநகர பேருந்தில் ஏறினார்.
இருக்கையில் அமர்ந்ததும், நெஞ்சு வலியால் மயங்கிய அவரைக் கண்ட மற்ற பயணியர், அவசர கால 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்த போது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதுகுறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 கிராம் நகை
திருடியவர் கைது
குன்றத்துார், அக். 8-
குன்றத்துார் அருகே, சோமங்கலத்தில், 2 கிராம் தங்க நகையைத் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 53. சென்னை தி.நகரில் உள்ள ஆடை விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் 21ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடிய நடுவீரப்பட்டு ராம்ஜி நகரைச் சேர்ந்த கார்த்திக், 34, என்பவரை கைது செய்து, 2 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.