/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் ஓட்டுநருக்கு மாரடைப்பு தப்பிய பயணியர்
/
பஸ் ஓட்டுநருக்கு மாரடைப்பு தப்பிய பயணியர்
ADDED : ஜன 20, 2025 11:37 PM

சென்னை, திருப்போரூரில் இருந்து அடையாறு, காந்திநகர் பேருந்து நிலையம் நோக்கி, தடம் எண் 102, மாநகர பேருந்து நேற்று காலை புறப்பட்டது.
ஓட்டுநர் அன்பழகன், 49, பஸ்சை ஓட்டினார். நடத்துநராக சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் பத்துக்கும் குறைவான பயணியரே இருந்தனர்.
அடையாறு மேம்பாலம் அருகில் பேருந்து சென்றபோது, திடீரென, ஓட்டுநர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை சாலையோரம் ஓரங்கட்ட நினைத்தார். ஓரமாக சென்றபோது, பாலத்தில் பஸ் மோதி நின்றது.
உடனே அங்கிருந்த போக்குவரத்து போலீசார், அன்பழகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பயணியருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன், நலமாக உள்ளார் என, பணிமனை ஊழியர்கள் கூறினர்.