sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீண்டும் கட்டப்படாத நிழற்குடை தெள்ளிமேட்டில் பயணியர் தவிப்பு

/

மீண்டும் கட்டப்படாத நிழற்குடை தெள்ளிமேட்டில் பயணியர் தவிப்பு

மீண்டும் கட்டப்படாத நிழற்குடை தெள்ளிமேட்டில் பயணியர் தவிப்பு

மீண்டும் கட்டப்படாத நிழற்குடை தெள்ளிமேட்டில் பயணியர் தவிப்பு


ADDED : ஜன 20, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில், தெள்ளி மேடு கிராமம் உள்ளது.

இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில் செல்லும் தடம் எண் '82சி' பேருந்துகள் இச்சாலை வழியே இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தை கொளத்துார், தெள்ளிமேடு, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி ஒரகடம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிறுத்தத்தில் இருபுறமும் பேருந்து நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

இது குறித்து தெள்ளிமேடு கிராமத்தினர் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த தடத்தில் சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

இதுவரை மீண்டும் நிழற்குடை அமைக்கப்படாததால் பெண்கள், மாணவ -- மாணவியர் நீண்ட நேரம் நின்றபடி பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us