/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் -சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
படாளம் -சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
படாளம் -சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
படாளம் -சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 10, 2025 01:18 AM

மதுராந்தகம்: படாளம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுராந்தகம் அருகே படாளம் - - பூதுார் நெடுஞ்சாலையில் பகல், இரவு நேரங்களில் பராமரிப்பின்றி சுற்றி திரியும் கால்நடைகள், நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்காக உலா வருவதால், விபத்து ஏற்படுகின்றன.
வாகன போக்குவரத்து உள்ள சாலையில் இரு சக்கர வாகனங்கள், கார், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன.
சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அரசு நிர்வாகம் அறிவித்துள்ள நிலையிலும், இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பழையனுார் ஊராட்சி நிர்வாகத்தினர், கால்நடைகளின் உரிமையாளர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

