/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழடைந்த நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
/
பாழடைந்த நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 10, 2025 01:11 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு அடுத்த பாலுாரில் பேருந்து நிழற்குடையை சீரமைக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இங்கு பாலுார் கண்டிகை சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு செங்கல்பட்டு - குருவன்மேடு, செங்கல்பட்டு - கொணாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நின்று செல்கின்றன.
பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை சிதிலமடைந்து மண் குவியல்கள் மற்றும் குப்பை நிறைந்து பயணியர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பயணியர் வெயில், மழைக்காலங்களில் நின்றபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

