sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

/

ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : செப் 13, 2025 01:12 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலுார்:வண்டலுார் அடுத்த நெடுங்குன்றம் ஏரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அண்ணா நகரில், நெடுங்குன்றம் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியைச் சுற்றிலும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவர்களில், அரசுக்குச் சொந்தமான நீர்நிலை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 750 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த, 750 குடும்பத்தினரின் வீடுகளை கணக்கெடுக்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், நேற்று காலை நெடுங்குன்றம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது, 100க்கும் மேற்பட்டோர் நெடுங்குன்றம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீடுகளை கணக்கெடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, ஊராட்சி தலைவர் வனிதா, துணை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாததால், வீடுகள் கணக்கெடுப்பு நடத்த முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us