sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு

/

பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு

பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு

பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு


ADDED : ஜன 30, 2024 06:27 AM

Google News

ADDED : ஜன 30, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே முதுகரை முதல் கூவத்துார் வரையிலான 25 கி.மீ., தார் சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இப்பகுதியில் இயங்கும் கல் குவாரிகளுக்கு வந்து செல்லும் லாரிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலகண்டை முதல் பெரியவெளிக்காடு கிராமங்களுக்கு இடையேயான 3 கி.மீ., சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத் துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

ஏற்கனவே உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர். இரண்டு புறங்களிலும், தலா 1.5 மீட்டர் என, 3 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்து, மொத்தம் 10 மீட்டர் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றாமல், அந்த பகுதியில் மட்டும் 2 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us