sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு


ADDED : செப் 18, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், செப். 18--

திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டத்தில் அடங்கியது, புதுப்பாக்கம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அனாதீனம் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

புதுப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண் 64/11ல், 28 சென்ட் புஞ்சை அனாதீனம் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மனை பிரிவாக மாற்றி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் எதிர்கால தேவை பயன்பாட்டிற்கும் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us