sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு

/

வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு

வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு

வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு


ADDED : டிச 21, 2024 10:28 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தலைவர் சந்தானம் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தரை, நேற்று முன்தினம் சந்தித்த நலச்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இது குறித்து, சந்தானம் கூறியதாவது:

வீரராகவன் ஏரியில் தண்ணீர் இருந்தால் தான், குரோம்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் இருக்கும். இந்த ஏரி வற்றினால், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும்.

பாழாகிவிட்ட ஏரியை சீரமைக்க வேண்டும். 28வது வார்டில், ஒரு கால்வாயை கூட துார் வாரவில்லை. பாலாஜி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை மற்றும் அக்கார்ட் ஹோட்டல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நியூ காலனி குழாயில் விடுவதாக புகார் வந்துள்ளது. அதை தடுக்க வேண்டும்.

அதேபோல், ரேலா, பாலாஜி மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்தி, அதில் பூங்கா அமைக்க வேண்டும்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலையில், மாநகராட்சி கடைகள் உள்ளன. இச்சாலை குறுகலாக உள்ளதால், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது.

அதனால், ஸ்டேஷன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, கமிஷனரிடம் முன்வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us