sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.1.25 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பை பறிமுதல்

/

ரூ.1.25 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பை பறிமுதல்

ரூ.1.25 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பை பறிமுதல்

ரூ.1.25 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பை பறிமுதல்


ADDED : ஜன 08, 2025 12:26 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி பகுதியில், 1 டன் எடை கொண்ட, பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை, மதுராந்தகம் பகுதியில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், நகராட்சி கமிஷனர் அபர்ணா தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நேற்று, சோதனை நடத்தினர்.

அப்போது, மதுராந்தகம் நகராட்சி ஜி.எஸ்.டி., சாலை பகுதியில் உள்ள பாலாஜி பிளாஸ்டிக் கடையில், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, 1 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த மதிப்பு, 1.25 லட்சம் ரூபாய்.

இதையடுத்து அந்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள், 40,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அபர்ணா கூறியதாவது:

மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us