/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி கல்லுாரியில் பொங்கல் விழா
/
ஆதிபராசக்தி கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 11:42 PM
செங்கல்பட்டு,
ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பொங்கல் விழா நடந்தது.
மேல்மருத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஜி.பி., விளையாட்டு மைதானத்தில், பொங்கல் விழா, ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
இதில், பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய உடையில் மாணவ, மாணவியர் பங்கேற்று, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில், ஊர்வலம் சென்றனர்.
பொங்கல் விழாவையொட்டி, கிராமிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.