/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 25ல் அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம்
/
வரும் 25ல் அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம்
ADDED : செப் 19, 2024 07:57 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், அஞ்சல் சேவை குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிக்கை:
செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி, மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
தபால் சம்பந்தப்பட்ட புகார்களில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர், பெறுவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, பதிவு தபால் ஆகியவற்றுக்கான விபரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் அளிக்க, கணக்கு எண், கணக்கு வைத்திருபோரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விபரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஆகியவற்றை, புகாருடன் இணைக்க வேண்டும்.
குறைகள் தொடர்பாக, செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு, அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாமிற்கு, வரும் 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.