sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகர் மின் கோட்டத்தில் 14 இடங்களில் நாளை மின் தடை

/

மறைமலை நகர் மின் கோட்டத்தில் 14 இடங்களில் நாளை மின் தடை

மறைமலை நகர் மின் கோட்டத்தில் 14 இடங்களில் நாளை மின் தடை

மறைமலை நகர் மின் கோட்டத்தில் 14 இடங்களில் நாளை மின் தடை


ADDED : ஜூன் 23, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி,

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், கானாத்துார் ஆகிய பகுதிகளில், 14 இடங்களில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மறைமலை நகர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மறைமலை நகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஹிராநந்தினி 33/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கானாத்துார் 11 கே.வி., மின்னுாட்டியில், அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளன.

இதனால், சினேகா கார்டன், பி.ஏ., ரோடு, வெங்கடேஷ்வரா கார்டன், முட்டுக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அதுபோல், படப்பை 110/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் 11 கே.வி., மின்னுாட்டியிலும், அவசரகால பராமரிப்பு பணிகள், நாளை நடக்க உள்ளன.

இதனால் பல்லாஞ்சேரி, லட்சுமிபுரம், ஈ.ஆர்.நகர், கார்த்திக் நகர், கன்னடப்பாளையம், சதாசிவம் நகர், காந்திஜி நகர், அண்ணா தெரு, பலராமபுரம், லலிதா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us