sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்

/

 கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்

 கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்

 கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்


ADDED : நவ 24, 2025 03:06 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், கார்த்திகை தீப பண்டிகை வழிபாட்டிற்காக, பாரம்பரிய மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவபெருமான், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னியாக தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்நாள், கார்த்திகை தீப பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மலைக்குன்றில், அன்றைய நாளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. பக்தர்களும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், மண் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வரும் டிச., 3ம் தேதி, கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தற்போது பாரம்பரிய மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த கடலுார், திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கடலுார் தொழிலாளர்கள் கூறும் போது,'களிமண் கிடைப்பது சிரமமாக இருந்தாலும், பாரம்பரிய தொழிலை செய்து வருகிறோம். அகல் விளக்குகளை, தலா ஒரு ரூபாய்க்கு, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us