/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையம் மதுராந்தகத்தில் திறப்பு - எப்போது?
/
ஆரம்ப சுகாதார நிலையம் மதுராந்தகத்தில் திறப்பு - எப்போது?
ஆரம்ப சுகாதார நிலையம் மதுராந்தகத்தில் திறப்பு - எப்போது?
ஆரம்ப சுகாதார நிலையம் மதுராந்தகத்தில் திறப்பு - எப்போது?
ADDED : மே 15, 2025 12:31 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது.
போதிய இட வசதி இன்மையால், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், புதியதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.
சுகாதார திட்டம்:-
இந்நிலையில், பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்பட்ட இடத்தில்,
15 வது நிதி குழு மான்யம் -சுகாதார திட்டத்தின் கீழ், 420 சதுர மீட்டர் பரப்பளவில், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டுவதற்கான பணி, கடந்த 2023 ல், டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.
ஒன்பது மாதங்கள் காலக்கெடுவுக்குள் அனைத்து பணிகளும் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், கட்டடப்பணி விரைந்து செயல்படுத்தப்படும் என, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது, கட்டுமான பணி துவங்கி, 17 மாதங்கள் ஆகிறது. எனவே, நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.