/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 17, 2025 10:06 PM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு கலெக்டர் வளாத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி, நடக்கிறது.
இதுகுறித்த கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் வளாகத்தில், வரும் 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடக்கிறது.
முகாமில், 50 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5, 000 பணியிடங்கள் நிரப்ப தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத்தேர்வு நடத்தி, தேர்வு செய்ய உள்ளனர்.
வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs,tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.
இதில், எட்டாம் வகுப்பு, 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பட்டப்படிப்பு, பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பினை பெறலாம்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்; 044- 27426020- 63834 60933 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.