/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்: சிங் கபெருமாள் கோவிலில் புறநகர் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

