sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரவு நேர மருத்துவர்கள் இல்லாத சூணாம்பேடு சுகாதார நிலையம் களத்தில் இறங்கி போராடிய கிராமவாசிகள்

/

இரவு நேர மருத்துவர்கள் இல்லாத சூணாம்பேடு சுகாதார நிலையம் களத்தில் இறங்கி போராடிய கிராமவாசிகள்

இரவு நேர மருத்துவர்கள் இல்லாத சூணாம்பேடு சுகாதார நிலையம் களத்தில் இறங்கி போராடிய கிராமவாசிகள்

இரவு நேர மருத்துவர்கள் இல்லாத சூணாம்பேடு சுகாதார நிலையம் களத்தில் இறங்கி போராடிய கிராமவாசிகள்


UPDATED : அக் 21, 2024 01:43 AM

ADDED : அக் 21, 2024 01:35 AM

Google News

UPDATED : அக் 21, 2024 01:43 AM ADDED : அக் 21, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே இல்லீடு கிராமத்தில் சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சூணாம்பேடு, மணப்பாக்கம், காவனுார், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தினமும் நுாற்றுக்கணக்கானோர் அவசர சிகிச்சை, முதலுதவி, பொது மருத்துவம், மகப்பேறு என, பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

* சூணாம்பேடு, ஆரவல்லி நகரைச் சேர்ந்த குணவதி, 49, என்பவருக்கு, கடந்த 18ம் தேதி காலை 5:30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

சுகாதார நிலைய பொது மருத்துவ அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், 15 நிமிடங்களாக கதவை தட்டியும், ஊழியர்கள் வெளியே வராததால், 20 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குணவதி உயிரிழந்தார்.

* அதேபோல், நேற்று காலை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, மருத்துவமனையின் கதவுகள் உள்பக்கமாக பூட்டி இருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த கிராமவாசிகள், இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியாற்றுவது இல்லை எனவும், அவசர சிகிச்சைக்கு வந்தால், கதவுகளை பூட்டிவிட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாக கூறி, ஆரம்ப சுகாதார நிலையம் முன், சூணாம்பேடு -- மதுராந்தகம் சாலையில், 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சூணாம்பேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அதில், 'இரவு நேரத்தில் மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்.

'அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். அதன்பின், மறியலில் ஈடுபட்ட கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us