sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்

/

கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்

கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்

கல்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில் அபாய சூழலில் உலவும் பொதுமக்கள்


ADDED : டிச 08, 2024 01:46 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்பாக்கம்:கல்பாக்கம் பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார கடற்கரை பகுதியில், அபாயம் உணராமல் பொதுமக்கள் உலவுகின்றனர்.

கல்பாக்கத்தில், வங்க கடலுடன், பகிங்ஹாம் கால்வாய் இணையும் முகத்துவாரம் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கடல்நீர் கால்வாய்க்கு வரும். பல மாதங்களாக, முகத்துவார பகுதியில் மணல் குவிந்து மேடாக இருந்தது.

மழையின்போது கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ளம், புதுப்பட்டினம் பகுதி கால்வாய் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

இப்பாதிப்பை தடுக்க, முகத்துவார பகுதி மணல்மேடு அகற்றப்பட்டு, கால்வாய் வெள்ளம் கடலில் சேரும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டது. இதனால், முகத்துவார பகுதி அபாய பள்ளமாக உள்ளது.

இப்பகுதியில் அச்சமின்றி, பொதுமக்கள் உலவுகின்றனர். கரையில் நிற்பவரை அலை இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. பலர் இறந்துள்ளனர். முகத்துவார கால்வாய் பகுதியில், பொதுமக்கள் உலவுவதை தடுக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us