sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி சிலைகள், நுழைவாயில் வளைவு அகற்றம்

/

புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி சிலைகள், நுழைவாயில் வளைவு அகற்றம்

புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி சிலைகள், நுழைவாயில் வளைவு அகற்றம்

புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி சிலைகள், நுழைவாயில் வளைவு அகற்றம்


ADDED : செப் 21, 2024 01:52 AM

Google News

ADDED : செப் 21, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது. சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்படும் தனியார், அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், சாலை விரிவாக்கத்திற்காக, நுழைவாயில் வளைவு இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் பகுதியில், அன்னை இளைஞர்கள் நற்பணி இயக்கத்தினர் அமைத்திருந்த திருவள்ளுவர், கண்ணகி ஆகியோர் சுதை சிலைகள், நுழைவாயில் அலங்கார வளைவு ஆகியவற்றை இடிக்க முடிவெடுத்தனர்.

ஆண்டுதோறும் சிலைகள் உள்ள பகுதியில், பொங்கல் விழா நடத்தி கொண்டாடுவதாகவும், சிலைகள், அலங்கார வளைவை அகற்றக்கூடாது என்றும், இயக்கம் சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு, சிலைகள் உள்ள பகுதியின் தேவை குறித்து விளக்கி, அவற்றை தற்போது இடித்து அகற்றினர். அவற்றை வேறிடத்தில், சாலை நிர்வாகமே அமைக்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என, இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us