/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகராட்சி ஊழியர்களுக்கு ' ரெயின்கோட் '
/
நகராட்சி ஊழியர்களுக்கு ' ரெயின்கோட் '
ADDED : அக் 28, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சியில் குடிநீர், மின்சாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போதைய வடகிழக்கு பருவமழைக்கால சூழலில், திறந்தவெளி பகுதிகளில் பணிபுரிய செல்லும் அவர்கள், மழையில் நனைந்து பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், அவர்களுக்கு 'ரெயின்கோட்' வழங்க முடிவெடுத்தது. நகராட்சி தலைவர் வளர்மதி, துணைத் தலைவர் ராகவன் ஆகியோர், 55 பேருக்கு அவற்றை வழங்கினர்.

