/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக விரோதிகள் கூடாராமாகும் ராமாபுரம் அம்மா பூங்கா
/
சமூக விரோதிகள் கூடாராமாகும் ராமாபுரம் அம்மா பூங்கா
சமூக விரோதிகள் கூடாராமாகும் ராமாபுரம் அம்மா பூங்கா
சமூக விரோதிகள் கூடாராமாகும் ராமாபுரம் அம்மா பூங்கா
ADDED : அக் 30, 2024 01:44 AM

அச்சிறுபாக்கம்,:சோத்துப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வேலாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தினர் பயன்பெறும் வகையில், 30 லட்சம் ரூபாயில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு, அதில் பல உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக, சிமென்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகளுடன் கூடிய கம்பம், இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கழிப்பறை, குடிநீர் வசதி, தோட்டம் மற்றும் கழிப்பறை பராமரிப்புக்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தனை வசதிகள் இருந்தாலும், பூங்காவை சரியான முறையில் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அனைத்து உபகரணங்களும் பழுதடைந்துள்ளது. நடை பயிற்சி தளமும் சேதமடைந்துள்ளது.
வளாக பகுதியில் குப்பைகள் தேங்கி, நடந்து செல்ல முடியாத வகையில் மது பாட்டில்கள் உடைந்து சிதறியுள்ளன. உடற்பயிற்சி கூடத்தில் பொருட்கள் திருடப்படுகின்றன.
இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறி வருகிறது.
பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை, மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.