/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி
/
நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத ஸப்தமி
ADDED : பிப் 05, 2025 12:40 AM

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் , ரத ஸப்தமி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
காலை 7:00 மணிக்கு உற்சவர் பிரகலாத வரதர் வஜ்ரங்கி சேவையில் சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு கருட வாகனத்திலும், 10:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
மாலை 4:30 மணிக்கு புண்ய கோடி விமானத்திலும், 6:00 மணிக்கு சேஷ வாகனத்திலும், இரவு 8:30 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.