/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டில் திருத்தம் செங்கையில் நாளை முகாம்
/
ரேஷன் கார்டில் திருத்தம் செங்கையில் நாளை முகாம்
ADDED : நவ 06, 2025 09:42 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டு உள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.
கீழ்க்கண்ட கிராமங்களில், ரேஷன் கடைகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், 8ம் தேதி, சனிக்கிழமை நடக்கிறது.
இதில், கார்டுதாரர்கள் தகுந்த ஆவணங்கள் கொடுத்து, தங்களது ரேஷன் கார்டில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

